டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு


டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் ₹45,000 கோடி வருமானம் இழப்பு
x
தினத்தந்தி 3 July 2020 5:41 AM GMT (Updated: 3 July 2020 5:41 AM GMT)

டிக்-டாக் போன்ற சீன செயலிகள் மீதான தடையால் 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

லடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது. சீன செயலிகள் மீதான தடையால் டிக்-டாக்செயலியின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும்“ என்றுள்ளனர்.

Next Story