மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலி


மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலி
x
தினத்தந்தி 9 July 2020 3:42 PM GMT (Updated: 9 July 2020 3:42 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் பலியாகி உள்ளனர்.

புனே,

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 7.67 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்நிலையில், மராட்டிய பொது சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 219 பேர் பலியாகி உள்ளனர்.  6,875 பாதிப்புகள் வரை உறுதி செய்யப்பட்டு உள்ளன.  4,067 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்புகள் 2,30,599 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 93,652 ஆகவும் உள்ளது.  இதுவரை 9,667 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Next Story