இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி


இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 July 2020 7:55 AM GMT (Updated: 15 July 2020 7:55 AM GMT)

இளைஞர்கள்பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி

ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாள் உங்கள் திறமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மிகப்பெரிய பலம் புதிய திறன்களைப் பெறுவதாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகிற்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது, இதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா வேலைகளின் தன்மையை மாற்றியுள்ளது, பின்னர் புதிய தொழில்நுட்பமும் உள்ளது, இது நம் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. நமது இளைஞர்கள் புதிய திறன்களைப் பின்பற்ற வேண்டும், 

மக்கள் தங்கள் வாழ்வாதாரதிற்காக சம்பாதிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் தற்போதைய நேரத்தில் பொருத்தமாக இருப்பது மாற்ற வேண்டியது மிகவும் முக்கியம்.

இளைஞர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பாதையை மாற்றி கொள்ள முடியும்.புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.இது உங்களை தன்னம்பிக்கை கொள்ள செய்யும்.

இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. என கூறினார்.

Next Story