புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு


புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 July 2020 11:19 AM GMT (Updated: 15 July 2020 11:19 AM GMT)

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு 3 பேர் இன்று உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 67 பேருக்கு இன்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,596 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 889 ஆக உள்ளது.  இதுவரை 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேர் உள்பட 3 பேர் இன்று பலியான நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story