இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 3 நில நடுக்கங்கள்


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 3 நில நடுக்கங்கள்
x
தினத்தந்தி 16 July 2020 4:06 AM GMT (Updated: 16 July 2020 4:06 AM GMT)

இந்தியாவின் குஜராத், அசாம், இமாசல பிரதேசங்களில் இன்றுகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அகமதாபாத்: 

குஜராத்தில் ராஜ்கோட்டில் இன்று காலை 7:40 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.

இந்த மாதம் மேற்கு மாநிலத்தை தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 5 ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள்  இன்று பதிவாகியுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7:57 மணிக்கு அசாமில் கரிம்கஞ்சை தாக்கியதாக நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அரசாங்க நோடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று அதிகாலை 4:47 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உனாவை ரிக்டர் அளவில் 2.3 ஆகக் குறைத்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.


Next Story