மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு


மராட்டிய முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
x

மராட்டிய முன்னாள் முதல் மந்திரி சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புனே,

மராட்டியத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சிவாஜி ராவ் பாட்டீல் நிலாங்கேக்கர் (வயது 88).  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக இருந்துள்ளார்.

அவரது மகளின் மருத்துவ தேர்வு மதிப்பெண்களில் திருத்தம் செய்த முறைகேட்டு வழக்கில் மும்பை ஐகோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்தது.  இதனை தொடர்ந்து அவர் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் புனேவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story