இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,395 கொரோனா மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,395 கொரோனா  மாதிரிகள் பரிசோதனை
x
தினத்தந்தி 21 July 2020 5:00 AM GMT (Updated: 21 July 2020 5:00 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,395 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 587 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு 11,55,191 ஆக உயர்ந்து உள்ளது. குணமடைந்தவர்கள் - 7,24,577 ஆக உள்ளனர் மொத்த உயிரிழப்பு - 28,084  என பதிவாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 1,43,81,303 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,33,395  கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 


Next Story