சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களில் முடிவு


சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களில் முடிவு
x
தினத்தந்தி 22 July 2020 11:29 AM GMT (Updated: 22 July 2020 11:29 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கம்போல் நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி முடிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கேட்டு கொண்டார்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.  எனினும், சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு ஆலோசனை மேற்கொண்டு 4 வாரங்களில் அதன் முடிவை அறிவிக்கும் என இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இன்று தெரிவித்து உள்ளது.

Next Story