பாங்காங் த்சோ எல்லை பகுதியில் பதற்றம்; இந்திய -சீன படைகள் துப்பாக்கிச் சூடு


பாங்காங் த்சோ எல்லை பகுதியில் பதற்றம்; இந்திய -சீன படைகள்  துப்பாக்கிச் சூடு
x
தினத்தந்தி 2 Sep 2020 10:08 AM GMT (Updated: 2 Sep 2020 10:08 AM GMT)

பாங்காங் த்சோ எல்லை பகுதியில் பதற்றம்; இந்திய மற்றும் சீன படைகள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.

புதுடெல்லி 

அண்மையில் நடந்த பாங்காங் த்சோ மோதல்கள் இந்தியாவையும் சீனாவையும் பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளன. தற்போது நம்பகமான அறிக்கைகள் கிழக்கு லடாக்கில் உள்ள  எல்லைக்கோட்டு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழ்நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

முதலில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரவு, பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று - பாங்காங் த்சோவின் (ஏரி) தென் கரையில் நிலையை மாற்றுவதற்காக சீன இராணுவத்தின் இரண்டு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன, மேலும் இந்திய படைகள் இப்பகுதியில் முன்னர் பயன்படுத்தப்படாத மூலோபாய உயரத்தை கட்டுப்படுத்த முடிந்தது.

பாங்காங் த்சோ சம்பவத்திற்குப் பின்னர் முந்தைய உயர்மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள் எந்த விளைவையும் தரவில்லை என்றும், சுஷுல் துணைப்பிரிவில் நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது.

சீன வீரர்கள் இந்திய படைகலை துப்பாக்கிச் சூடுக்கு உட்படுத்தியுள்ளனர், அவர்கள் ஒரு முக்கிய உயரத்தை 'பிளாக் டாப்' என்று அழைக்கின்றனர். பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் இருந்து ஸ்பாங்கூர் இடைவெளி வரை இந்த பாதை உள்ளது.

இரு நாடுகளின் படைகளும் இப்பகுதியில் உள்ள ஒரு புள்ளியில் சில நூறு மீட்டர் தொலைவில் பிரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும், இரு தரப்பினரும் கனரக கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தங்கள் இடங்களில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிகேட் கமாண்டர்-லெவல் புதிய சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.

கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்ட ஒரு உயர் மட்டக் கூட்டத்தில், இந்திய இராணுவம் தனது ஆக்கிரமிப்பு தோரணையை எல்லையில்  அனைத்து முக்கிய இடங்களிலும் பராமரிக்க அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எந்தவொரு சீன "தவறான முயற்சியையும்" திறம்பட கையாள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story