புதிய கல்வி கொள்கை - 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை


புதிய கல்வி கொள்கை -  7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
x
தினத்தந்தி 5 Sep 2020 5:59 AM GMT (Updated: 5 Sep 2020 5:59 AM GMT)

புதிய கல்வி கொள்கை தொடர்பாக 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக் கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், படிக்கும் போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக் கும் வகையிலும் இந்த புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்து வழங்கிய இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  புதிய கல்வி கொள்கை தொடர்பாக  7-ம் தேதி  மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்துகிறார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக வரும் 7-ம் தேதி ஜனாதிபதி நடத்தும் ஆலோசனை மாநாட்டில் காணொலி மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்பதால், ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story