அரசின் முயற்சியால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் - இறப்புகள் கட்டுப்படுத்தபட்டது- மத்திய அமைச்சர்


அரசின் முயற்சியால் நாட்டில் கொரோனா பாதிப்புகள் - இறப்புகள் கட்டுப்படுத்தபட்டது- மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 14 Sep 2020 7:10 AM GMT (Updated: 14 Sep 2020 7:10 AM GMT)

அரசின் முயற்சியால், நாட்டில் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கட்டுப்படுத்தபட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் விளக்கினார்

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,071-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1,136- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 46 ஆயிரத்து 428- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 86 ஆயிரத்து 598-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 37 லட்சத்து 80 ஆயிரத்து 108 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 79 ஆயிரத்து 722- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று பேசிய  மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:-

நாட்டில் சுமார் 13 மாநிலங்கள் அதிகபட்ச கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கின்றன 
"அதிகபட்ச வழக்குகள் மற்றும் இறப்புகள் முதன்மையாக மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், பீகார், தெலுங்கானா, ஒடிசா, அசாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய நாடுகளிலிருந்து பதிவாகின்றன.

இங்கு அனைத்தும் 1 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனாவை நிர்வகிப்பதற்கான எங்கள் முயற்சியால், இந்தியாவின் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை 10 லட்சத்துக்கு 3,328 பாதிப்புகள் மற்றும் 10 லடசம் மக்கள்தொகைக்கு 55 இறப்புகள் என கட்டுப்படுத்த முடிந்தது, இது இதேபோல் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது உலகின் மிகக் குறைவான பதிப்புள்ள நாடு இந்தியா என கூறினார்.

Next Story