'ஆபரேஷன் மேடம்ஜி': பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஊழியர் கைது


ஆபரேஷன் மேடம்ஜி: பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஊழியர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2020 11:20 AM GMT (Updated: 17 Sep 2020 11:20 AM GMT)

'ஆபரேஷன் மேடம்ஜி': பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு பார்த்ததாக இந்தியா பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரேவாரி: 

பாகிஸ்தான் ராணுவ புலனாய்வு (எம்ஐ) பிரிவுக்கு இரகசிய தகவல்களை அனுப்பியதற்காக ஒரு சிவில் பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோவை தளமாகக் கொண்ட இந்திய ராணுவ புலனாய்வு (எம்ஐ) தகவலின் அடிப்படையில், அரியானா காவல்துறையின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) புதன்கிழமை இராணுவ பொறியியல் சேவைகளின் (எம்.இ.எஸ்) சிவில் ஊழியர் மகேஷ் குமாரை ரேவாரியில் கைது செய்து உள்ளது. 

குமார், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாகிஸ்தான் எம்ஐ பிரிவின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்றதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஜெய்ப்பூரில் இருந்து குமார் பயன்படுத்திய மொபைல் எண் பாகிஸ்தான் இராணுவத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அனுப்புவதாக ஜூன் மாதத்தில் லக்னோ எம்ஐக்கு தகவல் கிடைத்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

குமார் பாகிஸ்தான் பெண்ணுடன் மேடம் ஜி என உரையாற்றி உள்ளார்.

குமார் எம்.இ.எஸ் ஜெய்ப்பூரில் ஒரு சிவிலியன் துப்புரவு ஊழியராக பணிபுரிந்தார், மேலும் குறைந்தது மூன்று அறியப்பட்ட பாகிஸ்தான் புலனாய்வு இயக்க (பி.ஐ.ஓ)  பேஸ்புக் கணக்குகளுடன் நண்பர்களாக இருந்தார்.

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ராணுவ படைப்பிரிவின்  சில மூத்த அதிகாரிகளின் விவரங்கள், பிசிடிஏ ஜெய்ப்பூரின் இருப்பிடம், எம்இஎஸ் புகார் பதிவுகளின் விவரங்கள், ஆகியவற்றை அவர் பகிர்ந்து கொண்டதாக அவர் காவல்துறை முன் ஒப்புக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

குமார் தனது பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பியதாகவும், செப்டம்பர் 2019 மற்றும் 2020 ஜனவரி மாதங்களில் அவர்களிடம் இருந்து பரிசாக ரூ .5 ஆயிரம் தனது  கணக்கில் பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் எம்.இ.எஸ் ஜெய்ப்பூரில் ஒரு துப்புரவு ஊழியராக இருந்தாலும்,  அவரின் மொபைல் சாதனத்தில் பல கடிதங்கள் மற்றும் அறிவிப்புகளின் புகைப்படங்கள் இருந்தன, அவற்றில் சில பாதுகாப்பு தொடரபான விவரங்கள் இருந்தன. ஜெய்ப்பூர் கண்டோன்மென்டில் உள்ள யூனிட்கள். கொரோனா தொடர்பான சுற்றறிக்கைகளின் புகைப்படங்களும், ஊழியர்களின் மொபைல் எண்களைக் கொண்ட பட்டியலும் அவரது கைபேசியில் இருந்தன.


Next Story