அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம்: நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார்


அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம்: நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 Sep 2020 7:26 PM GMT (Updated: 21 Sep 2020 7:26 PM GMT)

பிரபல இந்தி நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமாக இருப்பவர் நுஸ்ரத் ஜெகன்.

கொல்கத்தா,

பிரபல இந்தி நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமாக இருப்பவர் நுஸ்ரத் ஜெகன். இவர் கொல்கத்தாவின் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘இணையதள செயலி குறித்த விளம்பரத்தில் எனது உருவப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட செயலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை தனது டுவிட்டர் பதிவில், ‘எனது அனுமதி இல்லாமல் உருவப்படத்தை பயன்படுத்தியது ஒருபோதும் ஏற்க முடியாதது. கொல்கத்தா போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

நடிகையின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Next Story