நிலப்பிரச்சினையில் பூசாரி உயிரோடு எரித்துக்கொலை; 6 பேர் மீது வழக்கு


நிலப்பிரச்சினையில் பூசாரி உயிரோடு எரித்துக்கொலை; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Oct 2020 11:15 AM GMT (Updated: 9 Oct 2020 11:15 AM GMT)

ராஜஸ்தானில் நிலப்பிரச்சினையில் பூசாரி உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜெய்ப்பூர்: 

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 177 கி.மீ தூரத்தில் உள்ள கரபவுலி மாவட்டத்தில் பூசாரி ஒருவர் நில தகராறு தொடர்பாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் தீக்காயங்கள் காரணமாக இறந்தார்.

பூசாரிக்கு கரபவுலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ராதா கிருஷ்ணன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமாக சுமார் பதின்மூன்று பிர்க்ஹாக்கள் (சுமார் 5.2 ஏக்கர்) நிலம் நிலம் பூசாரிக்கு  வருமான ஆதாரமாக வழங்கப்பட்டது. 
கிராம பூசாரி, பாபு லால் வைஷ்ணவ், ஒரு சிறிய குன்றின் எல்லையில் அமைந்துள்ள தனது நிலத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில்  தனக்காக ஒரு வீட்டைக் கட்ட விரும்பினார். கட்டுமானத்தைத் தொடங்குவதற்காக, அவர் மூலம் நிலத்தை சமன் செய்தார்.

ஆதிக்கம் செலுத்தும் மீனா சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு குழு  இதை எதிர்த்ததோடு, நிலத்தை தங்கள் சொந்தமாகக் கோரினர்.

இந்த தகராறில் இது ஒரு வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. சர்ச்சைக்குரிய இடத்தில் கிடந்த அவரது பஜ்ரா (தினை) மீது ஆறு பேர் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்ததாக கூறபடுகிறது. அவர்கள் சாமியார் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார்.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட பூசாரிர் ஜெய்ப்பூரின் எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மரணமடைந்தார்.

மூத்த காவல்துறை அதிகாரி ஹர்ஜி லால் யாதவ் கூறும் போது  "உடலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம், மேலும் பிரதான குற்றவாளியான கைல்சா மீனாவை கைது செய்துள்ளோம் என கூறினார்.

பூசாரி  காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்துல்  ஆறு பேரை குறிப்பிட்டு உள்ளார். கைலாஷ், ஷங்கர், நமோ மீனா மற்றும் மூன்று பேர் ஆவார்கள்


Next Story