பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும்- சீனா எச்சரிக்கை


பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும்- சீனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2020 8:52 AM GMT (Updated: 17 Oct 2020 8:52 AM GMT)

வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளூக்கு ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என சீனாவின் குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி

சமீபகாலங்களாக இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவு அதிகரித்து வருவதால்  சீனா ஆத்திரமடைந்துள்ளது. 

முன்னதாக தைவானின் தேசிய தினத்தில் ஒரு இந்தியர் பங்கேற்பதைக் கண்டு அஞ்சிய சீனா, இப்போது இங்குள்ள ஊடகங்களை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிரிக்க வேண்டும் என்ற அதனது நோக்கமும் அம்பலமாகி வருகிறது.

இந்தியா டுடே தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவை பேட்டி கண்டது, அதில் தைவான் ஒருபோதும் சீனாவின் பகுதியாக இல்லை என்று கூறினார். தைவானின் நிலையை ஏற்றுக்கொள்ளும்படி சர்வதேச சமூகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஆட்சேபனைகளை எழுப்பியதோடு, தைவானுக்கு  ஆதரவு அளித்ததன் மூலம் ஒருங்கிணந்த-சீன கொள்கை மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தைவான் வெளியுறவு அமைச்சர் இந்திய சேனலுக்கு அளித்து பேட்டி கண்டு, கோபம் அடைந்துள்ள ​​சீனாவின்  அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் ஆசிரியர் வடகிழக்கை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனா நடவடிக்கை எடுக்கும் என்று நேரடியாக அச்சுறுத்தியுள்ளார்.

குளோபல் டைம்ஸ் ஆசிரியர் ஹு ஷிஜின் தனது டுவீட்டில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் சமூக சக்திகள் தைவான் பிரச்சினையில் விளையாடுகின்றன, வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளை நாங்கள் ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

இந்த வழிகளில் நாம் பதிலடி கொடுக்க முடியும். இந்திய தேசியவாதிகள் தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் நாட்டை எளிதாக பிரிக்கலாம். என சீனா அச்சுறுத்தியுள்ளது.

இந்தியா  நெருப்புடன் விளையாடுகிறது என அந்த பத்திரிக்கை எச்சரித்துள்ளது. முன்னதாக, புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே பாஜக தலைவர் தாஜிந்தர் பாகாவால் தைவான் தேசிய தினத்தை பதிவிட்டதற்காக குளோபல் டைம்ஸ் கோபமடைந்து. 

இந்த செயல், நெருப்புடன் விளையாடுவது போன்றது என்றும் இது ஏற்கனவே மோசமடைந்து வரும் இந்தியா-சீனா உறவுகளை மோசமாக்கும் என்றும் கூறியிருந்தது. 


Next Story