கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 13,550 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்


கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 13,550 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
x
தினத்தந்தி 22 Oct 2020 4:52 PM GMT (Updated: 22 Oct 2020 4:52 PM GMT)

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று மேலும் 5,778 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,88,551 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,770 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 13,550 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,84,835 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 92,927 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story