கொரோனா தொற்று தடைகள் நீக்கம்: சீனாவின் உகான் நகருக்கு இன்று முதல் வந்தே பாரத் விமானம் இயக்கம்


படம் :  IANS
x
படம் : IANS
தினத்தந்தி 30 Oct 2020 1:03 AM GMT (Updated: 30 Oct 2020 1:03 AM GMT)

கொரோனா தொற்று தடைகள் நீக்கப்பட்ட பின்னர் இன்று முதல் சீனாவின் உகான் நகருக்கு வந்தே பாரத் விமானத்தை இந்தியா இயக்குகிறது.

புதுடெல்லி: 

கொரோனா தொற்று நோய்  முதன் முதலில் கடந்த  டிசம்பரில்  சீனாவின் உகான் நகரில்  கண்டறியப்பட்டது, ஆனால் இப்போது நகரம் அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன.  கொரோனா வைரஸ் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் இன்று முதல் உகானுக்கு இந்தியா தனது முதல் விமானத்தைத் தொடங்க உள்ளது.

சீனாவின் உள்ள இந்திய தூதரக தகவல்படி, இன்று முதல் டெல்லி-உகான் விமான பாதையில்  வந்தே மாதரம் மிஷன் (விபிஎன்) விமானம் இயக்கப்படும். சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல இது சீனாவிற்கு ஆறாவது விமானமாகும்.

டெல்லி-குவாங்சோ இடையேயான அக்டோபர் 23 விமானம் ரத்து செய்யப்பட்ட பின்னர் டெல்லி-உகான் விமானத்தை ஏர் இந்தியா அறிவிக்க வேண்டியிருந்தது..

முன்னதாக, பிப்ரவரியில் கொடிய வைரஸ் உச்சத்தில் இருந்தபோது, நகரத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் ஏற்றிச்செல்ல இந்தியா உகானுக்கு மூன்று விமானங்களை இயக்கியது.

உதவி அல்லது வழிகாட்டுதலுக்காக பயணிகள் helpdesk.beijing@mea.gov.in அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 20 லட்சத்துக்கும்அதிகமான இந்தியர்கள் வெவ்வேறு முறைகள் மூலம் நாடு திரும்பியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story