கேரளாவில் இன்று 6,419 பேருக்கு கொரோனா பாதிப்பு


கேரளாவில் இன்று 6,419  பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 3:03 PM GMT (Updated: 18 Nov 2020 3:03 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 28 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,943  ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 69 ஆயிரத்து 394  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 லட்சத்து 84 ஆயிரத்து 460  பேர் குணம் அடைந்துள்ளனர். 


Next Story