ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு


ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2021 8:21 AM GMT (Updated: 6 March 2021 8:21 AM GMT)

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மத்திய அரசின் இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓட்டுநர் இருக்கைகளில் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story