மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்


மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 7 April 2021 8:42 AM GMT (Updated: 7 April 2021 8:42 AM GMT)

மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில்  உள்ளது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக  உள்ள மராட்டியத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் மராட்டியத்தில் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இன்னும் 3 நாள்கள் மட்டுமே  போடக்கூடிய அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும், மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் ரஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

 உடனடியாக கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை மராட்டியத்திற்கு அனுப்ப வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் நேற்று நடைபெற்ற ஆலோசனையின் போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் மந்திரி தெரிவித்தார். மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி 3 சதவீதம் வீணாவதாகவும் நாட்டில் 6 சதவீதம் அளவுக்கு வீண் ஆகி வருவதாகவும் ராஜேஷ் தோப் தெரிவித்தார்.  மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


Next Story