இன்று இரவுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மே 3 க்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளது.
இன்று இரவுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை மே 3 நள்ளிரவில் அல்லது அதற்கு முன்னர் சரிசெய்ய வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான சிறப்பு அமர்வு அவசர நோக்கங்களுக்காக ஆக்சிஜனின் தொகுப்பைத் நிறுவவும், அவசரகால பங்குகளின் இருப்பிடத்தை பரவலாக்கவும் மாநிலங்களுடன் ஒத்துழைப்புடன்" செயல்படுமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது.

அவசரகால ஆக்சிஜன் தொகுப்புகள் அடுத்த நான்கு நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் . மேலும் மாநிலங்களுக்கு தற்போதுள்ள ஆக்சிஜன் விநியோகத்தை ஒதுக்குவதோடு கூடுதலாக, அன்றாட அடிப்படையில் ஒதுக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் தனது 64 பக்க உத்தரவில் கூறி உள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 30 தேதியில் போடபட்டது. ஆனால் மே 2 அன்று வெளியிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com