காஷ்மீரில் என்கவுண்ட்டர்; வெளிநாட்டு பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டு கொலை


காஷ்மீரில் என்கவுண்ட்டர்; வெளிநாட்டு பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 4 May 2021 6:03 PM GMT (Updated: 4 May 2021 6:03 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதி உள்பட 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தபடி வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இன்று மாலையில் தொடங்கிய இந்த சண்டை ஏறக்குறைய 6 மணிநேரங்களாக நீடித்தது.

இந்நிலையில், என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.  அவர்களை அடையாளும் காணும் பணி நடந்தது.  இதில் அவர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்களில் ஒருவர் சோப்பூரின் ஹத்லாங்கூ பகுதியை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதியான வாசிம் அகமது லோனே என்பதும் மற்றொருவர் வெளிநாட்டு பயங்கரவாதியான ஹமாஸ் என்ற அஸ்ரார் என்ற சரியா என்பதும் தெரிய வந்துள்ளது.

சரியா கடந்த 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story