பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு


பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 4:35 PM GMT (Updated: 7 Dec 2021 4:35 PM GMT)

பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


போபால்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

எனினும், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு பரவி வருகிறது.  இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இந்த நிலையில், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என போபால் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அவர்களுடைய மரபணு மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story