கோட்டயம்: அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவி மர்ம சாவு..!


கோட்டயம்: அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவி மர்ம சாவு..!
x
தினத்தந்தி 17 April 2022 9:10 AM GMT (Updated: 17 April 2022 9:25 AM GMT)

கோட்டயம் அருகே 15 வயது மாணவி அடுக்கு மாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டயம்:

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் டென்னி குரியன். இவர் அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரீமா மற்றும் மகள் ரெயா (வயது 15). இவர்கள் கோட்டயம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ரெயா கோட்டயம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 வது வகுப்பில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குடியிருப்பின் 12 வது மாடியில் இருந்து ரெயா கீழே விழுந்தார். அப்போது எழுந்த ஓசை கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது ரெயா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தபடி கிடந்தார். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ரெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சம்பவமறிந்த கோட்டயம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயா எவ்வாறு கீழே விழுந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story