வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள் - ஜோதிர்ஆதித்ய சிந்தியா தகவல்


வரும் ஆண்டுகளில் ஒரு லட்சம் டிரோன் விமானிகள் தேவைப்படுவார்கள் - ஜோதிர்ஆதித்ய சிந்தியா தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 12:51 AM GMT (Updated: 11 May 2022 12:51 AM GMT)

வரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நிதி ஆயோக் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் டிரோன் தொழில்துறையை 3 சக்கரங்கள் உதவியுடன் முன்னேற்றி வருகிறோம். கொள்கை என்பது ஒரு சக்கரம். இரண்டாவது சக்கரம் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். இதன் மூலம் டிரோன் துறையில் உற்பத்தியும், சேவைகளும் ஊக்குவிக்கப்படும்.

3-வது சக்கரம் உள்நாட்டு தேவையை உருவாக்குதல். 12 அமைச்சகங்கள் உள்நாட்டு தேவையை அதிகரிக்க முயன்று வருகின்றன.

டிரோன்களை இயக்கும் பயிற்சியை பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். பட்டப்படிப்பு தேவையில்லை. 2 அல்லது 3 மாதங்கள் பயிற்சி பெற்றால், டிரோன் விமானி ஆகிவிடலாம். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

இனிவரும் ஆண்டுகளில் டிரோன்களை இயக்க ஒரு லட்சம் பேர் தேவைப்படுவார்கள். அந்த அளவுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story