மராட்டியத்தில் மேலும் 3 ஆயிரத்து 098 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் மேலும் 3 ஆயிரத்து 098  பேருக்கு கொரோனா
x

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் மேலும் 3 ஆயிரத்து098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 89 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 4 ஆயிரத்து 207 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 21 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story