எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு


எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு
x
தினத்தந்தி 29 Jun 2022 12:10 PM GMT (Updated: 29 Jun 2022 1:28 PM GMT)

கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி அதிரடியாக உயர்த்த ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் 2 ஆம் நாளான இன்று மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு
  • சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பேனா, மை, கத்தி, பிளேடு ஸ்பூன்களுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் அதிகரிப்பு
  • கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்வு
  • சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Next Story