புதுவை, காரைக்காலில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதுவை, காரைக்காலில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

புதுவை, காரைக்காலில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 720 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனையில் 11 பேர், வீடுகளில் 325 பேர் என 325 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 8.75 சதவீதமாகவும், குணமடைவது 98.67 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 140 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,364 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 4 ஆயிரத்து 861 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 21 லட்சத்து 35 ஆயிரத்து 884 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story