பாலக்காடு: ஓடும் ரெயிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


பாலக்காடு: ஓடும் ரெயிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x

பாலக்காடு அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்காடு:

சொரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் பரளி ரெயில் நிலையம் அருகே வந்தபோது பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அந்த கழிவறையில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பாலக்காடு போலீசார் அங்கு சென்று, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த தொழிலாளியான ராஜன் என்பது தெரியவந்தது. எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story