சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் 3-வது முறையாக பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு முன் இன்று வழக்கு விசாரணை!


சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் 3-வது முறையாக பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு முன் இன்று வழக்கு விசாரணை!
x

சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இன்று வழக்குகளை விசாரிக்கிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இன்று வழக்குகளை விசாரிக்கிறது.சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வருவது இது மூன்றாவது முறையாகும்.

நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று அமைத்தார்.திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் இன்று இந்த நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதற்கு முன், 2013 மற்றும் 2018ல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் பெஞ்சில் இருந்தனர்.2018 இல், நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வில் உறுப்பினர்களாக இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் 34 நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். அவர்களுள், 2027 இல், நீதிபதி பி.வி. நாகரத்னா 'நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி' என்ற பெருமையை அடைவார்.


Next Story