சோனியா காந்தியிடம் விசாரணை; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி


சோனியா காந்தியிடம் விசாரணை; நாடாளுமன்றத்தில்  எதிர்க்கட்சிகள் அமளி
x

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி கடந்த 3 தினங்களாக நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

புதுடெல்லி,

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி கடந்த 3 தினங்களாக நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். அதோடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story