மராட்டியத்தில் இன்று 3 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டியத்தில் இன்று 3 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

கோப்புப்படம்

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 3 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 31 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 032 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 ஆயிரத்து 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story