டெல்லி, உ.பி., அரியானாவில் கொரோனா அதிகரிப்பு...!!


டெல்லி, உ.பி., அரியானாவில் கொரோனா அதிகரிப்பு...!!
x

கோப்புப்படம்

டெல்லி, உ.பி., அரியானாவில் கொரோனா அதிகரித்துள்ளது. நாடெங்கும் ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 16,299 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 16 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, உ.பி., அரியானா ஆகிய வட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 2,726 பேருக்கும், அரியானாவில் 1,075 பேருக்கும், உ.பி.யில் 1,018 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 189 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் தினசரி பாதிப்பு விகிதம் 5.44 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 4.88 சதவீதமாகவும் பதிவானது.

நாடு முழுவதும் நேற்று கொரோனா தொற்றில் இருந்து 18 ஆயிரத்து 53 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 பேர் குணம் அடைந்துள்ளனர். குணம் அடைவோர் விகிதம் 98.53 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,541 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 535 ஆக குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 0.28 சதவீதம்தான்.

கொரோனாவுக்கு நாடெங்கும் நேற்று முன்தினம் 53 பேர் உயிரிழந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 49 ஆக குறைந்தது. கொரோனா தொற்றால் இதுவரையில் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதம் ஆகும்.

கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 10-ஐ கணக்கில் சேர்த்தனர்.

டெல்லியிலும், கர்நாடகத்திலும் தலா 6 பேரும், மராட்டியத்தில் 5 பேரும், மேற்கு வங்காளத்தில் 4 பேரும், உ.பி.யிலும், பஞ்சாபிலும் தலா 3 பேரும், உத்தரகாண்ட், சிக்கிம், குஜராத்தில் தலா 2 பேரும், அசாம், சண்டிகார், காஷ்மீர், ஜார்கண்ட், மணிப்பூர், ஒடிசாவில் தலா ஒருவரும் தொற்றால் நேற்று இறந்துள்ளனர்.


Next Story