ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா


ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா
x

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3 ஆயிரம் டன் கோதுமை இந்தியா வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது.

எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை வழங்குவதாக உறுதியளித்துள்ள இந்தியா, பகுதி பகுதியாக கோதுமையை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் இந்தியா நேற்று மேலும் 3 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இதோடு சேர்த்து இதுவரையில் மொத்தம் 33,500 டன் கோதுமை ஏற்றுமதியை இந்தியா நிறைவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் வழியாக லாரிகளில் கோதுமையை இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story