டெல்லியில் தடையை மீறி காங்கிரஸ் கட்சி போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு


டெல்லியில் தடையை மீறி காங்கிரஸ் கட்சி போராட்டம்:  மல்லிகார்ஜூன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
x

காங்கிரஸ் போராட்டம் நடத்த இருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதுடெல்லி:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும், காந்தி சிலை முன்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெறும் சத்தியாகிரகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து காங்கிரசார் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது. மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரசார் பெரும் திரளாக பங்கேற்றனர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ப தற்காக பிரியங்காகாந்தி, ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இருந்து இன்று காலை புறப்பட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த இருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காங்கிரசார் சத்தியாகிரகத்துக்கு அனுமதி தர முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நினைவிடம் அருகே நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரசாரின் போராட்டத்தையொட்டி டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story