மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்தேதி விசாரணை


மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்தேதி விசாரணை
x

மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

புதுடெல்லி,

காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் 'மேகதாது அணை திட்டம் - கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார்.

இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் ஆட்சேபித்தார். தமிழக அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.


Next Story