மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா


மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா
x

மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரிபதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக முக்தார் அப்பாஸ் நக்வி இருந்துவந்தார். அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளார்.

முக்தார் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story