மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்பு ; தற்கொலையா?


மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்பு ; தற்கொலையா?
x

சிவமொக்கா அருகே, மாயமான மூதாட்டி குமஸ்வதி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா தாலுகா சோரடி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்மா (வயது 62). 2 நாட்களுக்கு முன்பு அவர் சோரடியை அடுத்த குமஸ்வதி நதியின் அருகேயுள்ள சவுடேஸ்வரி கோவிலுக்கு சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன அவரது குடும்பத்தினர், அவரை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குமஸ்வதி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மாயமானதாக தேடப்பட்டு வந்த ரத்தினம்மா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story