நீட் தேர்வு அரசின் முடிவல்ல,அது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


நீட் தேர்வு அரசின் முடிவல்ல,அது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x

நீட் தேர்வு அரசின் முடிவல்ல, அது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இதில் அரசு தலையிட முடியாது என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும்,தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் சமன் படுத்தவே நீட்" ஏற்கனவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது, இருந்தாலும் மீண்டும் சென்னையில் உள்ள சாலையில் வைத்து சொல்கிறேன். நீட் தேர்வு அரசின் முடிவல்ல;அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இதில் அரசு தலையிட முடியாது என்றார்.


Next Story