மத்திய பிரதேசத்தில் 79-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...!


மத்திய பிரதேசத்தில் 79-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி...!
x

மத்திய பிரதேசத்தில் 79-வது நாளாக ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.

போபால்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை பாதயாத்திரை நடக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக மராட்டிய மாநிலத்தை அடைந்தது.

நேற்று முன்தினம் காலை, மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. காங்கிரஸ் தொண்டர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி நடந்து சென்றனர். அவர்கள் இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தனர்.

மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள்.

நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர். பிரியங்கா காந்தி முதல்முறையாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார்.

இந்தநிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் போர்கான் பகுதியில் இருந்து 'பாரத் ஜோடோ யாத்திரை' மீண்டும் தொடங்கினார். இதில் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் 2-வது நாளாக இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story