பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்: விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல்


பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்: விஜயகாந்த் மறைவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல்
x
தினத்தந்தி 28 Dec 2023 5:38 AM GMT (Updated: 28 Dec 2023 5:49 AM GMT)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

புதுடெல்லி,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை 'பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்' என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story