108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை


108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.

ராமநாதபுரம்

கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசிங்கம். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 23). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சாயல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவருக்கு வலி அதிகமானது. இதை தொடர்ந்து மருத்துவ உதவியாளர்கள் வீரபிரபாகரன், சரவணக்குமார் ஆகியோர் மாரியம்மாளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். பின்னர் தாயும், சேயும் திருஉத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர் கூறினார். இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.


Next Story