குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கரூரில் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

தற்கொலை

கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் பரத்வாஜ் (வயது 16). இவர் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததாக தெரிகிறது. இதனால் பரத்வாஜ் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவருக்கு பெற்றோர், உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பரத்வாஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பரத்வாஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த தற்கொலை குறித்து பரத்வாஜ் தாய் சந்திரிகா கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story