1250 டன் புழுங்கல் அரிசி


1250 டன் புழுங்கல் அரிசி
x

தஞ்சையில் இருந்து விழுப்புரத்துக்கு 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவதோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படும். தஞ்சையில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு மற்றும் அரிசி ஆலைகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி லாரிகளில் ஏற்றி தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story