திருச்சி-திருவனந்தபுரம் ரெயில் சேவையில் 13-ந்தேதி மாற்றம்


திருச்சி-திருவனந்தபுரம் ரெயில் சேவையில் 13-ந்தேதி மாற்றம்
x

திருச்சி-திருவனந்தபுரம் ரெயில் சேவையில் 13-ந்தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

என்ஜினீயரிங் பணி

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட கடம்பூர் யார்டு பகுதியில் என்ஜினீயரிங் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வண்டி எண் 22627 திருச்சி-திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) விருதுநகர்-திருவனந்தபுரம் இடையேயான பகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்படும். வண்டி எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 13-ந் தேதி திருவனந்தபுரம்-விருதுநகர் இடையேயான பகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்படும். அன்றைய தினம் விருதுநகரில் இருந்து மாலை 4.08 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும்.

ரெயில் சேவையில் மாற்றம்

வண்டி எண் 20691 தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக இரவு 11 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 12-ந் தேதி (திங்கட்கிழமை) திருச்சி-நாகர்கோவில் இடையேயான பகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 20692 நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மாலை 3.50 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். இந்த ரெயில் 13-ந் தேதி நாகர்கோவில்-திருச்சி இடையேயான பகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்படும். அன்றையதினம் இந்த ரெயில் திருச்சியில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story