கன்னியாகுமரியில் 2 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 17 ஆயிரம் பேர் பார்த்தனர்


கன்னியாகுமரியில் 2 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 17 ஆயிரம் பேர் பார்த்தனர்
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:45 PM GMT)

கன்னியாகுமரியில் 2 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 17 ஆயிரம் பேர் பார்த்தனர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அடுத்த படியாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் பார்வையிடுவார்கள்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட செல்லும் படகு துறையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு அதாவது சனிக்கிழமை 9 ஆயிரத்து 200 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 200 பயணிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியுள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story