ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2023 7:00 PM GMT (Updated: 16 May 2023 7:00 PM GMT)

தென்காசியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தென்காசி டவுன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அங்கு வந்த லோடு ஆட்டோவை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது லோடு ஆட்டோவில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லோடு ஆட்டோவில் இருந்த தென்காசி ஆயிரப்பேரி தெற்கு தெருவை சேர்ந்த சிவாஜி (வயது 45), மத்தளம்பாறையை சேர்ந்த சுடலைமுத்து (25) ஆகியோரை கைது செய்தனர். அரிசி மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story