கரை சேரும் முன்பே உயிரை விட்ட 2 யானைகள்... ஒகேனக்கலில் சோகம் - கலங்க வைக்கும் காட்சிகள்


கரை சேரும் முன்பே உயிரை விட்ட 2 யானைகள்... ஒகேனக்கலில் சோகம் - கலங்க வைக்கும் காட்சிகள்
x

ஒகேனக்கல் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டு பன்றிகள் என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி உணவுகளை தேடி யானைகள் வெளியே வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் உணவு தேடி ஊருக்குள் வந்த 3 காட்டு யானைகள் மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கிய பலியாகியது. இதேபோல் கம்பைநல்லூர் அருகே உயர்மின்கம்பி உரசியதில் ஒரு காட்டுயானை உயிரிழந்தது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு சம்பவம் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 10 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது.

இதேபோல் கோடுப்பட்டி பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதனையும் வனத்துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த 2 யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தில், சிக்கி யானைகள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன எனது குறிப்பிடத்தக்கது.


Next Story