வட மாநில லாரி டிரைவர்கள் 2 பேர் பலி


வட மாநில லாரி டிரைவர்கள் 2 பேர் பலி
x

கந்திகுப்பம் அருகே தேசிய ெநடுஞ்சாலையை கடக்க முயன்ற வட மாநில லாரி டிரைவர்கள் 2 பேர் கார் மோதி பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

வடமாநில லாரி டிரைவர்கள்

மத்திய பிரதேச மாநிலம் இண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் யாதவ் (60). இவர்கள் இருவரும் மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியை ஓட்டி வந்தனர். கடந்த 5-ந் தேதி இரவு 8.30 மணியளவில் ஒரப்பம் பஸ் நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு சாலையின் மறுபுறம் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி வந்த கார் சிவபிரசாத், ஜெகதீஸ் யாதவ் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவபிரசாத் இறந்தார். ஜெகதீஸ் யாதவ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (44) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story