வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது


வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
x

பட்டிவீரன்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 31). இவர், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ெதன்மண்டல ஐ.ஜி. தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் வீட்டில் இருந்த அவரது கூட்டாளி ஹரீஸ்குமார் (23) ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரும் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story